என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷம் வைத்து மயில்கள் சாகடிப்பு - விவசாயியிடம் வனத்துறையினர் விசாரணை
Byமாலை மலர்20 Oct 2020 2:20 PM GMT (Updated: 20 Oct 2020 2:20 PM GMT)
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷம் வைத்து 3 மயில்கள் சாகடிக்கப்பட்டது குறித்து விவசாயி ஒருவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சூடிபுதூர் பகுதியில் 3 பெண் மயில்கள் இறந்து கிடப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரி சுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது அங்குள்ள விவசாய நிலம் அருகே 3 மயில்கள் இறந்து கிடந்தன. அந்த மயில்களின் உடல்களை கைப்பற்றிய வனத்துறையினர் கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை மேற்கொண்டனர்.
மேலும் மயில்கள் எப்படி இறந்தன என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வயல்காட்டில் மக்காச்சோளத்தை சேதப்படுத்தியதால் அரிசியில் குருணை மருந்து கலந்து வைத்தது தெரிய வந்தது. இதனை சாப்பிட்ட 3 மயில்களும் இறந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் மயில்களுக்கு விஷம் வைத்த அந்த விவசாயியை பிடித்து வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X