என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
120 குரோஸ் திரியுடன் வாலிபர் கைது
Byமாலை மலர்13 Oct 2020 4:19 AM GMT (Updated: 13 Oct 2020 4:19 AM GMT)
பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் 120 குரோஸ் வெள்ளைத்திரியை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி:
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி அனுமதியின்றி பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதையும், அனுமதியின்றி பட்டாசுகளை கொண்டு செல்வதையும் தடுக்க போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிவகாசி அருகே உள்ள மாரனேரி சிங்கம்பட்டியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் 120 குரோஸ் வெள்ளைத்திரியை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தையும், வெள்ளை திரியையும் போலீசார் பறிமுதல் செய்து பர்மா காலனியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.
மாரனேரி பகுதியில் உள்ள ஒரு சில பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிக்க பயன்படும் திரிகளை தயாரித்து உரிய ரசீது இல்லாமல் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது போன்று பாதுகாப்பு இல்லாமல் இரு சக்கர வாகனங்களில் திரிகளை கொண்டு செல்லும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதிகாரிகள் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி அனுமதியின்றி பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதையும், அனுமதியின்றி பட்டாசுகளை கொண்டு செல்வதையும் தடுக்க போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிவகாசி அருகே உள்ள மாரனேரி சிங்கம்பட்டியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் 120 குரோஸ் வெள்ளைத்திரியை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தையும், வெள்ளை திரியையும் போலீசார் பறிமுதல் செய்து பர்மா காலனியை சேர்ந்த வெற்றிவேல் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.
மாரனேரி பகுதியில் உள்ள ஒரு சில பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிக்க பயன்படும் திரிகளை தயாரித்து உரிய ரசீது இல்லாமல் வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது போன்று பாதுகாப்பு இல்லாமல் இரு சக்கர வாகனங்களில் திரிகளை கொண்டு செல்லும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதிகாரிகள் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X