என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கந்தம்பாளையம் அருகே விபத்தில் தொழிலாளி பலி
Byமாலை மலர்10 Oct 2020 11:37 AM GMT (Updated: 10 Oct 2020 11:37 AM GMT)
கந்தம்பாளையம் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள கருக்கம்பாளையம் தொண்டிகாட்டை சேர்ந்தவர் ராமன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அவரது மொபட்டில் பெருங்குறிச்சியில் இருந்து சோழசிராமணி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் வண்ணாம்பாறை என்ற பகுதியில் சென்றபோது கவுண்டிபாளையத்தை சேர்ந்த கடலை வியாபாரி செல்வராசு (45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும், ராமன் மொபட்டும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த ராமனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராமன் சிகிச்சை பலனின்றி இறந்தார். செல்வராசு சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தம்பாளையம் அருகே உள்ள கருக்கம்பாளையம் தொண்டிகாட்டை சேர்ந்தவர் ராமன் (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அவரது மொபட்டில் பெருங்குறிச்சியில் இருந்து சோழசிராமணி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் வண்ணாம்பாறை என்ற பகுதியில் சென்றபோது கவுண்டிபாளையத்தை சேர்ந்த கடலை வியாபாரி செல்வராசு (45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும், ராமன் மொபட்டும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த ராமனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராமன் சிகிச்சை பலனின்றி இறந்தார். செல்வராசு சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X