என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Byமாலை மலர்7 Oct 2020 12:41 PM GMT (Updated: 7 Oct 2020 12:41 PM GMT)
துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
சென்னை,
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இந்த அறிவிப்பை ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டார். அதேபோல், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவையும் அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்தார். அப்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் பன்னீர் செல்வம். முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்ததற்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்தார்.
அப்போது அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி , சி.வி.சண்முகம் உள்பட பலர் இருந்தனர். முதல்வர் பழனிசாமியிடம் எம்.பி. ரவீந்திரநாத் ஆசி பெற்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X