என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சின்னசேலம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்3 Oct 2020 9:12 AM GMT
சின்னசேலம் அருகே நடத்தையில் கணவர் சந்தேகம் அடைந்ததால் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சின்னசேலம்:
சின்சேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மனைவி சீத்தா(வயது 27). கோவையில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பெட்ரிஷியா(4) என்ற மகளும், யோகமித்ரன் என்ற 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் சீத்தாவின் நடத்தையில் பிரகாசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. சம்பவத்தன்றும் இது தொடர்பாக அவர்களுக்கிடையே சண்டை நடந்தது. இதனால் விரக்தி அடைந்த சீத்தா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சீத்தாவை தூக்கில் இருந்து இறக்கி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சீத்தாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சீத்தாவின் தாய் வள்ளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி சப்-கலெக்டருக்கு விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். சீத்தாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
சின்சேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மனைவி சீத்தா(வயது 27). கோவையில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பெட்ரிஷியா(4) என்ற மகளும், யோகமித்ரன் என்ற 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் சீத்தாவின் நடத்தையில் பிரகாசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. சம்பவத்தன்றும் இது தொடர்பாக அவர்களுக்கிடையே சண்டை நடந்தது. இதனால் விரக்தி அடைந்த சீத்தா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சீத்தாவை தூக்கில் இருந்து இறக்கி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சீத்தாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சீத்தாவின் தாய் வள்ளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி சப்-கலெக்டருக்கு விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். சீத்தாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X