search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallakurichi Suicide"

    • சங்கராபுரம் அருகே மூட்டு வலி காரணமாக வேதனை அடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனியன் (வயது 65). விவசாயி. இவருக்கு மூட்டு வலி அதிகமாக இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த முனியன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முனியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி அருகே அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தால் டிப்ளமோ மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் உதயமாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. அவரது  மகன் கார்த்திகேயன் (வயது19) திருச்சி அருகே துறையூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் கடந்த மாதம் உதயமாம்பட்டில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தால் வீட்டில் இருந்த எலி பேஸ்ட் சாப்பிட்டுவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். இதனால் இவரை மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இதுகுறித்து இவரது அக்கா பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    திருநாவலூர் அருகே தாய் செல்போன் வாங்கி தராததால் மனமுடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி  மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகர். அவரது  மனைவி ராஜகுமாரி.  இவர்களது மகள் பாக்கியலட்சுமி (வயது 15). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில ஆண்டுக்கு முன்பு குணசேகர் இறந்து போனார். எனவே  ராஜகுமாரி குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி தனது தாயாரிடம் செல்போன் வாங்கி தரும்படி கேட்டார். ஆனால் ராஜகுமாரி குடும்ப வறுமையை காரணம் காட்டி செல்போன் வாங்கி கொடுக்க மறுத்து விட்டார்.

    இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார். இவரது உடல் கிணற்றில் மிதந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த  போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன்,  சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி, ஏட்டு மனோகரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரிக்கிறார்கள். மாணவியின் உடலை திருநாவலூர், உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
    ×