என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5 வயது சிறுமியை கொன்று தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
Byமாலை மலர்1 Oct 2020 12:34 AM GMT (Updated: 1 Oct 2020 12:34 AM GMT)
5 வயது சிறுமியை கொன்று தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள முதுகம்பட்டி தின்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி செந்தாமரை (வயது 25). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு லாவண்யா (7), மோனிகா (5) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த செந்தாமரை தனது 2-வது மகள் மோனிகாவுடன் அதே பகுதியை சேர்ந்த மாது என்பவருடைய தோட்டத்திற்கு சென்றார். அங்கு திடீரென தனது மகளை 50 அடி ஆழ கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இருந்து செந்தாமரை மற்றும் சிறுமி மோனிகா ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த செந்தாமரையின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள முதுகம்பட்டி தின்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி செந்தாமரை (வயது 25). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு லாவண்யா (7), மோனிகா (5) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த செந்தாமரை தனது 2-வது மகள் மோனிகாவுடன் அதே பகுதியை சேர்ந்த மாது என்பவருடைய தோட்டத்திற்கு சென்றார். அங்கு திடீரென தனது மகளை 50 அடி ஆழ கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இருந்து செந்தாமரை மற்றும் சிறுமி மோனிகா ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த செந்தாமரையின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X