என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கண்ணமங்கலம் அருகே தார் சாலை அமைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
Byமாலை மலர்28 Sep 2020 11:33 AM GMT (Updated: 28 Sep 2020 11:33 AM GMT)
கண்ணமங்கலம் அருகே தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள சிங்கிரிகோவில் கிராமத்திற்கு மேல்வல்லம் மற்றும் காட்டுக்காநல்லூர் கிராமங்களிலிருந்து செல்லும் 3 கிலோ மீட்டர் சாலை உள்ளது. இச்சாலை மிகவும் குறுகலாக வயல்வெளிகளுக்கு இடையே உள்ளதால் எதிரே வரும் வாகனங்களுக்கு கூட வழியில்லை. தற்போது இச்சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு ஜல்லிகற்களுடன் செம்மண் கலவை போடப்பட்டது. அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக சேறும் சகதியுமாக இருப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக இச்சாலையை கணியம்பாடி மற்றும் கண்ணமங்கலம் வழியாக சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்லும் வெளியூர் பக்தர்கள் அதிகளவு வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். மழை பெய்ததால் இச்சாலையில் போடப்பட்ட ஜல்லி கற்கள் செம்மண் கலவை சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
எனவே உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X