search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது

    வெம்பக்கோட்டை பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் தலைமையில் போலீசார் வெற்றிலையூரணி பகுதிகளில் வீடுகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது வெற்றிலையூரணி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (வயது52), சின்னசாமி (54), முனியசாமி (35) ஆகிய 3 பேரின் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், 30 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

    கீழகோதை நாச்சியார்புரத்தில் கொடியரசன் (46), கவியரசன் (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 20 கிலோ பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல ராமலிங்கபுரத்தில் வீரராஜ் (47), செல்வராஜ் (57), சுதாகரன் (42) ஆகிய 3 பேரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த 650 குரோஸ் வெள்ளை திரிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×