என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது
Byமாலை மலர்27 Sep 2020 11:58 AM GMT (Updated: 27 Sep 2020 11:58 AM GMT)
வெம்பக்கோட்டை பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி:
வெம்பக்கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் தலைமையில் போலீசார் வெற்றிலையூரணி பகுதிகளில் வீடுகளில் சோதனை நடத்தினர்.
அப்போது வெற்றிலையூரணி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (வயது52), சின்னசாமி (54), முனியசாமி (35) ஆகிய 3 பேரின் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், 30 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
கீழகோதை நாச்சியார்புரத்தில் கொடியரசன் (46), கவியரசன் (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 20 கிலோ பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல ராமலிங்கபுரத்தில் வீரராஜ் (47), செல்வராஜ் (57), சுதாகரன் (42) ஆகிய 3 பேரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த 650 குரோஸ் வெள்ளை திரிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X