என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கண்ணமங்கலம் அருகே மினிவேன் மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்27 Sep 2020 11:10 AM GMT (Updated: 27 Sep 2020 11:10 AM GMT)
கண்ணமங்கலம் அருகே மினிவேன் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே ஏகாம்பரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). இவர் நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் அய்யம்பாளையம் நோக்கி சென்றார். அப்போது தஞ்சிஅம்மன் கோவில் மலை அடிவாரத்தில் செல்லும் ரோட்டில் எதிரே அய்யம்பாளையம் கிராமத்தில் இருந்து வேகமாக வந்த மினிவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அருண்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மினிவேனை ஓட்டி வந்த சந்தவாசல் வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் (28) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம் அருகே ஏகாம்பரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). இவர் நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் அய்யம்பாளையம் நோக்கி சென்றார். அப்போது தஞ்சிஅம்மன் கோவில் மலை அடிவாரத்தில் செல்லும் ரோட்டில் எதிரே அய்யம்பாளையம் கிராமத்தில் இருந்து வேகமாக வந்த மினிவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அருண்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மினிவேனை ஓட்டி வந்த சந்தவாசல் வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் (28) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X