என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலக்கரி ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்து
Byமாலை மலர்26 Sep 2020 11:28 PM GMT (Updated: 26 Sep 2020 11:28 PM GMT)
தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
தேனி:
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 24). லாரி டிரைவர். இவரும், விளாத்திகுளத்தை சேர்ந்த கிளீனரான முனியசாமியும் (27) கன்டெய்னர் லாரியில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி வந்தனர். வழியில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிப்பட்டியை அடுத்த மாலைப்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் கன்டெய்னரில் இருந்த நிலக்கரி அனைத்தும் கீழே கொட்டி சாலையை அடைத்துக்கொண்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.
இது குறித்து தகவலறிந்ததும் க.விலக்கு போலீசார் விரைந்து வந்து லாரியை மீட்டு சாலையில் கொட்டிக்கிடந்த நிலக்கரியை மாற்று லாரியில் ஏற்றி அனுப்பிவைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தின்போது யாருக்கும் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 24). லாரி டிரைவர். இவரும், விளாத்திகுளத்தை சேர்ந்த கிளீனரான முனியசாமியும் (27) கன்டெய்னர் லாரியில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி வந்தனர். வழியில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிப்பட்டியை அடுத்த மாலைப்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் கன்டெய்னரில் இருந்த நிலக்கரி அனைத்தும் கீழே கொட்டி சாலையை அடைத்துக்கொண்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.
இது குறித்து தகவலறிந்ததும் க.விலக்கு போலீசார் விரைந்து வந்து லாரியை மீட்டு சாலையில் கொட்டிக்கிடந்த நிலக்கரியை மாற்று லாரியில் ஏற்றி அனுப்பிவைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தின்போது யாருக்கும் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X