search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ பறிமுதல்

    அம்மாப்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    அம்மாப்பேட்டை:

    அம்மாப்பேட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட நெய்குன்னம் ஊராட்சியில் பாபநாசம் தாசில்தார் கண்ணன் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மலையபுரத்தில் இருந்து வந்த ஒரு சரக்கு ஆட்டோவை அதிகாரிகள் மறித்தனர். அதிகாரிகளை பார்த்த உடன் சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்தவர் ஆட்டோவை வழியில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். 

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் சரக்கு ஆட்டோவை சோதனையிட்ட போது ஆட்டோவில் அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×