search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    ஆற்றுப்பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

    ஆற்றுப்பால தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 38). விவசாயியான இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பூலாம்பாடியில் இருந்து வேப்படிபாலக்காடு நோக்கி சென்றார். ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலசந்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலசந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×