என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 25 ஆயிரம் ‘ரெம்டிசிவிர்’ மருந்துகள் சென்னை வந்தடைந்தது
Byமாலை மலர்21 Sep 2020 8:24 PM GMT (Updated: 21 Sep 2020 8:24 PM GMT)
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முதல்கட்டமாக 25 ஆயிரம் எண்ணிக்கையிலான மருந்துகள் சென்னைக்கு நேற்று வந்தது.
சென்னை:
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் ‘ரெம்டிசிவிர்’ போன்ற விலை உயர்ந்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தகைய மருந்துகளை தேவைக்கு ஏற்ப தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் கொள்முதல் செய்து வருகிறது.
இந்த நிலையில், 2 லட்சம் எண்ணிக்கையிலான ‘ரெம்டிசிவிர்’ மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு நிறுவனங்களிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதில், முதல்கட்டமாக 25 ஆயிரம் எண்ணிக்கையிலான மருந்துகள் சென்னைக்கு நேற்று வந்தது. இந்த மருந்துகளை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது எனவும், மீதமுள்ள 1 லட்சத்து 75 ஆயிரம் எண்ணிக்கையிலான மருந்துகள் அடுத்த மாதம் இறுதிக்குள் சென்னைக்கு வந்தடையும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் ‘ரெம்டிசிவிர்’ போன்ற விலை உயர்ந்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தகைய மருந்துகளை தேவைக்கு ஏற்ப தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் கொள்முதல் செய்து வருகிறது.
இந்த நிலையில், 2 லட்சம் எண்ணிக்கையிலான ‘ரெம்டிசிவிர்’ மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு நிறுவனங்களிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதில், முதல்கட்டமாக 25 ஆயிரம் எண்ணிக்கையிலான மருந்துகள் சென்னைக்கு நேற்று வந்தது. இந்த மருந்துகளை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது எனவும், மீதமுள்ள 1 லட்சத்து 75 ஆயிரம் எண்ணிக்கையிலான மருந்துகள் அடுத்த மாதம் இறுதிக்குள் சென்னைக்கு வந்தடையும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X