search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    திண்டிவனத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

    திண்டிவனத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டிவனம்:

    திண்டிவனம் ஜெயபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 40). சம்பவத்தன்று இவர் சொந்த வேலை காரணமாக தனது வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார். இந்த நிலையில் ரமேசின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து ரமேசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரமேஷ் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததுடன், துணிமணிகளும், சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 2 ஜோடி வெள்ளி கொலுசுகள், ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த பணம் மற்றும் வெள்ளி கொலுசுகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×