என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகர்கோவில் நிலம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்17 Sep 2020 12:17 PM GMT (Updated: 17 Sep 2020 12:17 PM GMT)
நாகர்கோவில் அருகே நிலம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பறக்கை ஐ.எஸ்.இ.டி. நகரை சேர்ந்தவர் யூசப் (வயது 33). இவருக்கு வடிவீஸ்வரம் பகுதியில் சொந்தமாக 2 சென்ட் நிலம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை ஐ.எஸ்.இ.டி. நகரை சேர்ந்த வியாபாரியான முகமது முஸ்தபா (45) என்பவருக்கு ரூ.20 லட்சத்துக்கு விற்பனை செய்தார். தொடர்ந்து முகமது முஸ்தபா நிலத்தை அளவீடு செய்தபோது, 2 சென்டுக்கும் குறைவாக இருந்ததும், நிலம் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதனால் பணத்தை திரும்பி தரும்படி யூசப்பிடம் கேட்டுள்ளார். ஆனால் யூசப் பணத்தை கொடுக்கவில்லை.
இதுகுறித்து முகமது முஸ்தபா நாகர்கோவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கோட்டார் போலீசுக்கு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து நில மோசடியில் ஈடுபட்டதாக யூசப், அவரது மகன் புஸ்ரா, இடலாக்குடியை சேர்ந்த சேக் அகமது, முகமது மைதீன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X