என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விதிமுறையை மீறி இயங்கிய 2 குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைப்பு
Byமாலை மலர்16 Sep 2020 10:07 AM GMT (Updated: 16 Sep 2020 10:07 AM GMT)
தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறையை மீறி இயங்கிய 2 குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
தூத்துக்குடி:
உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து 300 மில்லி, 500 மில்லி, ஒரு லிட்டர் மற்றும் 20 லிட்டர் குடிநீர் பாட்டில்களை உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் குடிநீர் நிறுவனங்களில் ஆய்வு செய்து மாதிரிகள் சேகரித்தனர். கடந்த 2 நாட்களில் 25 நிறுவனங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
இந்த மாதிரி சேகரிப்பின்போது, ஆழ்வார்திருநகரி குறிப்பன்குளத்தில் உள்ள ஒரு குடிநீர் விற்பனை நிறுவனமும், ஸ்ரீவைகுண்டம் ஆயத்துறையில் உள்ள ஒரு குடிநீர் விற்பனை நிறுவனமும் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படுவது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த நிறுவனங்களை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் மூடி ‘சீல்’ வைத்தார்.
உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து 300 மில்லி, 500 மில்லி, ஒரு லிட்டர் மற்றும் 20 லிட்டர் குடிநீர் பாட்டில்களை உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் குடிநீர் நிறுவனங்களில் ஆய்வு செய்து மாதிரிகள் சேகரித்தனர். கடந்த 2 நாட்களில் 25 நிறுவனங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
இந்த மாதிரி சேகரிப்பின்போது, ஆழ்வார்திருநகரி குறிப்பன்குளத்தில் உள்ள ஒரு குடிநீர் விற்பனை நிறுவனமும், ஸ்ரீவைகுண்டம் ஆயத்துறையில் உள்ள ஒரு குடிநீர் விற்பனை நிறுவனமும் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படுவது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த நிறுவனங்களை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் மூடி ‘சீல்’ வைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X