search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குண்டும், குழியுமான சாலை
    X
    குண்டும், குழியுமான சாலை

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே குண்டும்- குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே குண்டும்- குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பிள்ளையார்பட்டி:

    தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே நீலகிரி ஊராட்சி திருவள்ளுவர் நகர் 5-வது தெருவில் சாலை சேதமடைந்து குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் சாலையில் உள்ள பள்ளத்தில் மக்கள் அடிக்கடி தவறி விழுகிறார்கள். மழை பெய்தால் இந்த சாலையில் மழைநீர் தேங்கி வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×