search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    வாணியம்பாடியில் கடையின் பூட்டை உடைத்து கேமரா, பணம் கொள்ளை

    வாணியம்பாடியில் கடையின் பூட்டை உடைத்து கேமரா, ரூ. 32 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் ஹுயேர்அஹமத். இவர், வாணியம்பாடி நேதாஜிநகர் பகுதியில் கடை நடத்தி வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த கேமரா, இருசக்கர வாகனம், ரூ.32 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    கடையின் உரிமையாளர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடைக்கு அருகில் வசித்து வரும் பிரசாந்த் என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அவரை விசாரணைக்காக வாணியம்பாடி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×