search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மெலட்டூரில் போலி டாக்டர் கைது

    மெலட்டூரில் போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் மெலட்டூர் நடுத்தெருவை சேர்ந்தவர் மணியன் (வயது 50). இவர், தனது வீட்டின் ஒரு பகுதியில் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை(அலோபதி) அளித்து வந்தார். இது குறித்து மெலட்டூர் போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மெலட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மணியன் டாக்டருக்கு படிக்கவில்லை என்றும், சித்தா பிரிவில் மருந்தாளுனராக பணியாற்றிய அனுபவத்தை வைத்து ஆங்கில மருத்துவத்தை கையாண்டதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×