என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனியில் வீட்டு மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்10 Sep 2020 10:54 AM GMT (Updated: 10 Sep 2020 10:54 AM GMT)
தேனியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த டீக்கடை தொழிலாளி வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த டீக்கடை தொழிலாளி வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள செக்காபட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 52). இவர் டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மகள் பானுபிரியா தேனி பங்களாமேடு கள்ளர்சொசைட்டி அருகில் வசிக்கிறார்.
அழகர்சாமி தனது மனைவி ஜெயலட்சுமியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியில் உள்ள மகள் வீட்டுக்கு வந்திருந்தார். அழகர்சாமிக்கு ஏற்கனவே மது அருந்தும் பழக்கம் இருந்த நிலையில், சில மாதமாக மது குடிக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், மகள் வீட்டுக்கு வந்திருந்த அழகர்சாமிக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே நேற்று காலை குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அது தகராறாக மாறியது. அப்போது ஜெயலட்சுமி, கணவரை திட்டியதாக தெரிகிறது. இதனால், விரக்தி அடைந்த அழகர்சாமி தனது மகள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X