search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தேனியில் வீட்டு மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை

    தேனியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த டீக்கடை தொழிலாளி வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தேனி:

    தேனியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த டீக்கடை தொழிலாளி வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள செக்காபட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 52). இவர் டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மகள் பானுபிரியா தேனி பங்களாமேடு கள்ளர்சொசைட்டி அருகில் வசிக்கிறார்.

    அழகர்சாமி தனது மனைவி ஜெயலட்சுமியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியில் உள்ள மகள் வீட்டுக்கு வந்திருந்தார். அழகர்சாமிக்கு ஏற்கனவே மது அருந்தும் பழக்கம் இருந்த நிலையில், சில மாதமாக மது குடிக்காமல் இருந்துள்ளார்.

    இந்நிலையில், மகள் வீட்டுக்கு வந்திருந்த அழகர்சாமிக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே நேற்று காலை குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அது தகராறாக மாறியது. அப்போது ஜெயலட்சுமி, கணவரை திட்டியதாக தெரிகிறது. இதனால், விரக்தி அடைந்த அழகர்சாமி தனது மகள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×