search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை நிலவரம்
    X
    வானிலை நிலவரம்

    மதுரை, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்

    தமிழகத்தில் மதுரை, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில்  இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும்  பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன்  காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரமக்குடியில் 11 செமீ மழை பெய்துள்ளது. கீழ் கோதையாறில் 9 செமீ, கடம்பூர் மற்றும் கயத்தாறில் தலா 6 செமீ, தேவலா, சத்தியமங்கலத்தில் தலா 5 செமீ மழை பதிவாகி உள்ளது.

    தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு, லட்சத்தீவு பகுதி, குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று பலத்தகாற்று வீசும். இதேபோல் இன்று முதல் 8ம் தேதி வரை கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளிலும், 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு, லட்சத்தீவு பகுதிகளிலும், 10ம்தேதி மன்னார் வளைகுடா பகுதிகளிலும் பலத்தகாற்று வீசக்கூடும். தென்மேற்க அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 10ம் தேதி வரை பலத்தகாற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

    தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு 11.30  மணி வரை  கடல் உயர் அலை 3.5 முதல் 4.8 மீட்டர் வரை எழும்பக்கூடும்.

    இவ்வாறு வானிலை மையம் கூறி உள்ளது.
    Next Story
    ×