என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாவட்டத்தில் இதுவரை 62 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது- போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்
Byமாலை மலர்31 Aug 2020 9:39 AM GMT (Updated: 31 Aug 2020 9:39 AM GMT)
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 62 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பராமரிக்கும் வகையில், போதைப்பொருள், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை, ரவுடிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் 24 ரவுடிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதில் 20 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 62 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதில் 54 வழக்குகள் பதிவு செய்து, 56 பேர் கைது செய்யப்பட்டு 3,063 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் 5 நான்கு சக்கர வாகனம் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியில் சுற்றியவர்கள் மீது இதுவரை 8 ஆயிரத்து 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 3 ஆயிரத்து 540 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பராமரிக்கும் வகையில், போதைப்பொருள், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை, ரவுடிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் 24 ரவுடிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதில் 20 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 62 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதில் 54 வழக்குகள் பதிவு செய்து, 56 பேர் கைது செய்யப்பட்டு 3,063 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் 5 நான்கு சக்கர வாகனம் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியில் சுற்றியவர்கள் மீது இதுவரை 8 ஆயிரத்து 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 3 ஆயிரத்து 540 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X