search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சேவூரில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

    சேவூரில் லாட்டரி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேவூர்:

    சேவூர் பந்தம்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக சேவூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு, தனி பிரிவு போலீஸ் வெள்ளியங்கிரி ஆகியோர் அந்தப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, அங்கு லாட்டரி சீட்டு விற்ற பந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன் (வயது 40), கவின் (26), பெரியசாமி (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×