என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே இளம்பெண் மாயம்- போலீசில் புகார்
Byமாலை மலர்26 Aug 2020 9:54 AM GMT (Updated: 26 Aug 2020 9:54 AM GMT)
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே இளம்பெண் மாயமானது குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
கருவாக்குறிச்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ஷாலினி (வயது 22). இவர் சிறு வயதிலிருந்து பாப்பாநாடு அருகே ஆம்பலாபட்டு குடிக்காட்டில் அவரது பெரியம்மா சுலக்சனா வீட்டில் தங்கி பள்ளி, மற்றும் கல்லூரி படிப்பை படித்து வந்துள்ளார்.
தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். பின் வேலைக்கு போக பிடிக்கவில்லை என்று கூறி சொந்த ஊரான கருவாகுறிச்சிக்கு சென்று தங்கியுள்ளார். அவரது வீட்டில் ஷாலினிக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால் ஷாலினி எனக்கு திருமணம் இப்போது வேண்டாம் என கூறி விட்டு கடந்த 5-ந்தேதி ஆம்பலாப்பட்டு குடிக்காட்டில் உள்ள பெரியம்மா சுலக்சனா வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
ஷாலினியின் தந்தையும் பெரியம்மா வீட்டில் தானே இருக்கிறார் என நினைத்து கொண்டுள்ளார். ஆனால் அவர் அங்கே இல்லை என நேற்று தெரிந்துள்ளது. உடனே பாப்பாநாடு போலீசில் ஷாலினி காணவில்லை என அவரது பெரியப்பா பேச்சுமுத்து கொடுத்த புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கருவாக்குறிச்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ஷாலினி (வயது 22). இவர் சிறு வயதிலிருந்து பாப்பாநாடு அருகே ஆம்பலாபட்டு குடிக்காட்டில் அவரது பெரியம்மா சுலக்சனா வீட்டில் தங்கி பள்ளி, மற்றும் கல்லூரி படிப்பை படித்து வந்துள்ளார்.
தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். பின் வேலைக்கு போக பிடிக்கவில்லை என்று கூறி சொந்த ஊரான கருவாகுறிச்சிக்கு சென்று தங்கியுள்ளார். அவரது வீட்டில் ஷாலினிக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால் ஷாலினி எனக்கு திருமணம் இப்போது வேண்டாம் என கூறி விட்டு கடந்த 5-ந்தேதி ஆம்பலாப்பட்டு குடிக்காட்டில் உள்ள பெரியம்மா சுலக்சனா வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
ஷாலினியின் தந்தையும் பெரியம்மா வீட்டில் தானே இருக்கிறார் என நினைத்து கொண்டுள்ளார். ஆனால் அவர் அங்கே இல்லை என நேற்று தெரிந்துள்ளது. உடனே பாப்பாநாடு போலீசில் ஷாலினி காணவில்லை என அவரது பெரியப்பா பேச்சுமுத்து கொடுத்த புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X