search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    ஒரத்தநாடு அருகே இளம்பெண் மாயம்- போலீசில் புகார்

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே இளம்பெண் மாயமானது குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒரத்தநாடு:

    கருவாக்குறிச்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ஷாலினி (வயது 22). இவர் சிறு வயதிலிருந்து பாப்பாநாடு அருகே ஆம்பலாபட்டு குடிக்காட்டில் அவரது பெரியம்மா சுலக்சனா வீட்டில் தங்கி பள்ளி, மற்றும் கல்லூரி படிப்பை படித்து வந்துள்ளார்.

    தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். பின் வேலைக்கு போக பிடிக்கவில்லை என்று கூறி சொந்த ஊரான கருவாகுறிச்சிக்கு சென்று தங்கியுள்ளார். அவரது வீட்டில் ஷாலினிக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால் ஷாலினி எனக்கு திருமணம் இப்போது வேண்டாம் என கூறி விட்டு கடந்த 5-ந்தேதி ஆம்பலாப்பட்டு குடிக்காட்டில் உள்ள பெரியம்மா சுலக்சனா வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

    ஷாலினியின் தந்தையும் பெரியம்மா வீட்டில் தானே இருக்கிறார் என நினைத்து கொண்டுள்ளார். ஆனால் அவர் அங்கே இல்லை என நேற்று தெரிந்துள்ளது. உடனே பாப்பாநாடு போலீசில் ஷாலினி காணவில்லை என அவரது பெரியப்பா பேச்சுமுத்து கொடுத்த புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×