என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
Byமாலை மலர்15 Aug 2020 10:12 AM GMT (Updated: 15 Aug 2020 10:12 AM GMT)
சுதந்திர தின விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
தேனி:
நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தேனி மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் அணைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை ஆகிய அணைகளிலும், தேனி, போடி உள்பட மாவட்டம் முழுவதும் நகர் பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும், முக்கிய இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மெட்டல் டிடெக்டர் மற்றும் வெடிகுண்டுகள் கண்டறியும் நவீன கருவிகளுடன் வெடிகுண்டுகள் கண்டறியும் சோதனை நடத்தினர்.
சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. நகர் பகுதிகளிலும் திடீர் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா நடைபெறும் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேற்று இந்த விளையாட்டு அரங்கிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தேனி மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் அணைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை ஆகிய அணைகளிலும், தேனி, போடி உள்பட மாவட்டம் முழுவதும் நகர் பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும், முக்கிய இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மெட்டல் டிடெக்டர் மற்றும் வெடிகுண்டுகள் கண்டறியும் நவீன கருவிகளுடன் வெடிகுண்டுகள் கண்டறியும் சோதனை நடத்தினர்.
சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. நகர் பகுதிகளிலும் திடீர் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா நடைபெறும் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேற்று இந்த விளையாட்டு அரங்கிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X