search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    கல்லூரி சேர்க்கை தொடர்பாக செல்பவர்களுக்கு இ-பாஸ் முறை ரத்து செய்ய வேண்டும்- டிடிவி தினகரன்

    கல்லூரி சேர்க்கை தொடர்பாக செல்பவர்களுக்கு இ-பாஸ் முறை ரத்து செய்யப்படவேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    கல்லூரி சேர்க்கைக்காக செல்லும் மாணவர், உடன் செல்வோருக்கு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து மதிப்பெண் சான்றிதழை காட்டினால் அனுமதிக்கவேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    கல்லூரி சேர்க்கை தொடர்பான பணிகளுக்காக தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கும், சென்னைக்கு வருவதற்கும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறையால் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறார்கள்.

    இதற்காக இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த பலரின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதால், அவர்கள் கல்லூரியில் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை காட்டினாலே போதும்; மாணவருக்கும், அவருடன் வருபவருக்கும் இ-பாஸ் தேவையில்லை என முதலமைச்சர் உடனடியாக அறிவிக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய பிரச்னையில் அரசு இனியும் காலதாமதம் செய்வதோ; அலட்சியம் காட்டுவதோ கூடாது”.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×