என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி-பெங்களூரு விமான சேவை நாளை மீண்டும் தொடக்கம்
Byமாலை மலர்7 Aug 2020 10:37 AM GMT (Updated: 7 Aug 2020 10:37 AM GMT)
தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு விமான சேவை நாளை மீண்டும் தொடங்குகிறது.
தூத்துக்குடி:
விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி விமான நிலையம் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் 5 சேவையும், பெங்களூருக்கு ஒரு விமான சேவையும் வழங்கப்பட்டு வந்தது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து சென்றனர். இதன் காரணமாக விமான நிலைய விரிவாக்க பணிகள் வேகமாக நடந்து வந்தன.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக விமானசேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக மீண்டும் தூத்துக்குடி-சென்னை விமானம் இயங்க தொடங்கியது. தற்போது தூத்துக்குடி-சென்னை இடையே 2 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு தூத்துக்குடி-பெங்களூரு இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்படுகிறது. நாளை(சனிக்கிழமை) முதல் இந்த விமான சேவை தொடங்குகிறது. வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் மட்டும் இந்த விமானம் இயக்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து காலை 7-20 மணிக்கு புறப்படும் விமானம் 9 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. தூத்துக்குடியில் இருந்து காலை 9-20 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு பெங்களூருவை சென்றடைகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த விமான சேவை மீண்டும் தொடங்குவதால் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி விமான நிலையம் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் 5 சேவையும், பெங்களூருக்கு ஒரு விமான சேவையும் வழங்கப்பட்டு வந்தது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து சென்றனர். இதன் காரணமாக விமான நிலைய விரிவாக்க பணிகள் வேகமாக நடந்து வந்தன.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக விமானசேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக மீண்டும் தூத்துக்குடி-சென்னை விமானம் இயங்க தொடங்கியது. தற்போது தூத்துக்குடி-சென்னை இடையே 2 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு தூத்துக்குடி-பெங்களூரு இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்படுகிறது. நாளை(சனிக்கிழமை) முதல் இந்த விமான சேவை தொடங்குகிறது. வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் மட்டும் இந்த விமானம் இயக்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து காலை 7-20 மணிக்கு புறப்படும் விமானம் 9 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. தூத்துக்குடியில் இருந்து காலை 9-20 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு பெங்களூருவை சென்றடைகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த விமான சேவை மீண்டும் தொடங்குவதால் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X