search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை - தடை கோரிய மனுவிற்கு மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை கோரிய மனுவிற்கு மத்திய அரசு நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை தொடங்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ், அனுமதி பெற வேண்டும். இந்த சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. மேலும் இது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்குமாறு பொது மக்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    இதற்கிடையே, மீனவ அமைப்பு சார்பாக, கே.ஆர்.செல்வராஜ் குமார், மீனவர் நல சங்கம் அமைப்பின் தலைவர் தியாகராஜன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி வெளியிட்ட மத்திய அரசு, 11.04.2020-ல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கையை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபணையை தெரிவிக்க தற்போது அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    பிராந்திய மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபணைகளை தெரிவிக்கக் கோருவது ஏற்புடையது அல்ல என்பதால், வரைவு அறிக்கை மீதான மேல் நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்" என கோரியுள்ளார்.

    இந்நிலையில், இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக ஐகோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வரைவு அறிக்கை நடவடிக்கைக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.

    மேலும், இந்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த மனுவிற்கு மத்திய அரசு நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
    Next Story
    ×