search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேசன் அரிசி பறிமுதல்
    X
    ரேசன் அரிசி பறிமுதல்

    ஆம்பூர் அருகே லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    ஆம்பூர் அருகே லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்ட எல்லை பகுதியான மாதனூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச் சாவடி வழியாக ஒரு லாரி நேற்று முன்தினம் வந்தது. அதனை சோதனை செய்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதற்குள் லாரி டிரைவர் லாரியை விட்டுவிட்டு தப்பியோடி தலைமறைவானார். லாரியில் இருந்த 15 டன் ரேசன் அரிசி மற்றும் லாரியை திருப்பத்தூர் பறக்கும்படை தனி தாசில்தார் பழனி, ஆம்பூர் தாசில்தார் பத்மநாபன் ஆகியோர் கொண்ட குழுவினர் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×