search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    ஆர்.எஸ்.மங்கலத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்.எஸ்.மங்கலம்:

    ராமநாதபுரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞரணி செயலாளர் சண்முகராஜ் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளியை கைது செய்யக்கோரி ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஒருங்கிணைந்த மாட்டுவண்டி சங்க அமைப்பாளர் குருசாமி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், விவசாய சங்க செயலாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாட்டுவண்டி சங்கத்தை சேர்ந்த பால்சாமி, முருகேசன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×