search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விக்கிரவாண்டி அருகே டிரைவரிடம் தங்க சங்கிலி பறித்த திருநங்கை கைது

    விக்கிரவாண்டி அருகே கார் டிரைவரிடம் தங்க சங்கிலி பறித்த திருநங்கையை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.
    விக்கிரவாண்டி:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வெள்ளாளர் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் முத்து மகன் ராம்குமார் (வயது 28). கார் டிரைவர். இவர் கடந்த 28-ந்தேதி விருதுநகரில் இருந்து சென்னைக்கு சென்று பின்னர் மீண்டும் விருதுநகர் திரும்பினார். நீண்ட தூரம் கார் ஓட்டியதால், விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணை பிரிவு சாலை அருகே சர்வீஸ் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த திருநங்கை ஒருவர் ராம்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று மாலை விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த திருநங்கையை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரித்தனர். அதில் அவர் வீடுர் அடுத்த கணபதிபட்டை சேர்ந்த சங்கவி (28) என்பதும், கார் டிரைவர் ராம்குமாரின் தங்க சங்கிலியை பறித்தவரும் தெரியவந்தது. இதையடுத்து சங்கவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×