என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இண்டூர் அருகே புதுப்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
Byமாலை மலர்30 July 2020 4:09 PM GMT (Updated: 30 July 2020 4:09 PM GMT)
இண்டூர் அருகே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே உள்ள சிறுகலூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி அனிதா (வயது 20). இவர்கள் 2 பேரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் அனிதாவின் பெற்றோர் அந்த திருமணத்தை ஏற்று கொண்டனர்.
அதன்பிறகு அனிதா அவ்வப்போது பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்தார். இந்த நிலையில் பெற்றோர் வீட்டிற்கு சென்று வர கணவரிடம் அவர் அனுமதி கேட்டதாகவும், அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அனிதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். திருமணமான 9 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X