search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இண்டூர் அருகே புதுப்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

    இண்டூர் அருகே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாப்பாரப்பட்டி:

    இண்டூர் அருகே உள்ள சிறுகலூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி அனிதா (வயது 20). இவர்கள் 2 பேரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் அனிதாவின் பெற்றோர் அந்த திருமணத்தை ஏற்று கொண்டனர். 

    அதன்பிறகு அனிதா அவ்வப்போது பெற்றோர் வீட்டிற்கு சென்று வந்தார். இந்த நிலையில் பெற்றோர் வீட்டிற்கு சென்று வர கணவரிடம் அவர் அனுமதி கேட்டதாகவும், அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அனிதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். 

    அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். திருமணமான 9 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×