search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய கொடி
    X
    தேசிய கொடி

    சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் தொடக்கம்

    சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கி உள்ளது.
    சென்னை:

    நாட்டின் 74-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம், அடுத்த மாதம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை கோட்டை கொத்தளத்தில் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், முதலமைச்சர் பழனிசாமி, 120 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்ற உள்ளார்.

    முப்படை வீரர்கள், தமிழக காவல்துறை, அதிரடிப்படை, குதிரைப்படையின் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதற்கான பிரத்யேக ஏற்பாடுகள் சென்னை கோட்டைகொத்தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

    மேடை, கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளிட்டவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தகுந்த முன்னெச்சரிக்கையுடன் சுதந்திர தினத்தை கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×