என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தோகைமலையில் மருத்துவ முகாம்
Byமாலை மலர்28 July 2020 9:13 AM GMT (Updated: 28 July 2020 9:13 AM GMT)
தோகைமலையில் வட்டார மருத்துவர் தியாகராஜன் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மாத்திரைகள் வழங்கப்பட்டது.
தோகைமலை:
தோகைமலை வேதாச்சலபுரம் தெருவில் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தோகைமலையில் உள்ள அனைத்து வணிகர்களும் தாமாக முன்வந்து நேற்று முதல் வரும் 31-ந்தேதி வரை தினமும் மதியம் 12 மணிக்குமேல் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவித்தனர். அதன்படி நேற்று பகல் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. இதனால் தோகைமலை பகுதி பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல், தோகைமலை ஒன்றியம் கீழவெளியூர் காமராஜ் நகரில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மேற்கண்ட பகுதிகள் மற்றும் தோகைமலையில், வட்டார மருத்துவர் தியாகராஜன் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மாத்திரைகள் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X