search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- வாலிபர் பலி

    கள்ளக்குறிச்சி அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மூங்கில்துறைப்பட்டு:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள நாகலூர் பகுதியை சேர்ந்தவர் சபாபதி மகன் வேல்முருகன் (வயது 34). இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது.

    இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த வேல்முருகன், திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூரில் தாய் வீட்டில் இருந்த மஞ்சுவை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மணலூர் காப்புகாடு அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் வேல்முருகன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன் பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×