search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி
    X
    திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

    திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்

    திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை அமைக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் தடையை மீறி போராட்டம் நடந்தது. 

    இதில் திருச்செந்தூர் தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன், ஒன்றிய செயலாளர் சங்கதமிழன், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி, செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படிமுத்து, திருச்செந்தூர் நகர துணை செயலாளர் ஆறுமுகம், விடுதலை கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் சிறுத்தை சிவா, ஒன்றிய துணை செயலாளர் செஞ்சுடர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×