என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாசுதேவநல்லூர் அருகே மெக்கானிக் மர்ம மரணம்
Byமாலை மலர்25 July 2020 11:34 AM GMT (Updated: 25 July 2020 11:34 AM GMT)
வாசுதேவநல்லூர் அருகே மெக்கானிக் மர்ம மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் கோட்டை தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல் என்ற முருகன் (வயது 40). இருசக்கர வாகன மெக்கானிக்கான இவர் வாசுதேவநல்லூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு கடையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். கடந்த 21-ந்தேதி கடைக்குள் தூங்க சென்ற முருகன் அதன்பிறகு வெளியே வரவில்லை. நேற்று முன்தினம் அவருடைய அண்ணன் அண்ணாத்துரை, அவரை தேடி கடைக்கு வந்தார். அப்போது கடைக்குள் முருகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பிரேத பரிசோதனை முடிவில்தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X