என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதிப்பெண் குறைந்ததால் விபரீதம்: பிளஸ்-2 மாணவர் தற்கொலை
Byமாலை மலர்18 July 2020 5:39 PM GMT (Updated: 18 July 2020 5:39 PM GMT)
சேரன்மாதேவியில் மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேரன்மாதேவி:
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி கீழ முதல் தெருவை சேர்ந்தவர் சபரிமாலை. இவருடைய மகன் பரத்ராஜ் (வயது 17). இவர் சேரன்மாதேவியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதி இருந்தார்.
நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பரத்ராஜின் மதிப்பெண்கள் குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பரத்ராஜ் சோகத்தில் இருந்துள்ளார்.
நேற்று அவரது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த பரத்ராஜ், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்ததும் அவரது பெற்றோர் பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தனர். மகன் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து சேரன்மாதேவி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மதிப்பெண் குறைந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி கீழ முதல் தெருவை சேர்ந்தவர் சபரிமாலை. இவருடைய மகன் பரத்ராஜ் (வயது 17). இவர் சேரன்மாதேவியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதி இருந்தார்.
நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பரத்ராஜின் மதிப்பெண்கள் குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பரத்ராஜ் சோகத்தில் இருந்துள்ளார்.
நேற்று அவரது பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த பரத்ராஜ், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்ததும் அவரது பெற்றோர் பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தனர். மகன் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து சேரன்மாதேவி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மதிப்பெண் குறைந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X