என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தூர் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக் கொலை
Byமாலை மலர்13 July 2020 6:27 AM GMT
சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் கூலித்தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சாத்தூர்:
சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 48). விறகு வெட்டும் கூலித் தொழிலாளி. இவரும், அதே ஊரைச் சேர்ந்த முனியசாமி (50) என்பவரும் விறகு வெட்டும் கூலித் தொழில் செய்து வந்தனர்.
விறகு வெட்டும் தொழிலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் முனியசாமி குடிபோதையில் வெங்கடாசலபதியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு வீட்டு வாசலில் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த வெங்கடாசலபதியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். உடனே அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவியும், மகளும் வெளியே ஓடி வந்து முனியசாமியை தடுத்தனர். இதில் அவர்களுக்கும் கையில் வெட்டுக் காயம் விழுந்தது.
அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த வெங்கடாசலபதி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முனியசாமியை விரட்டி சென்று மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து சாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபகுமார் வழக்குப் பதிவு செய்து முனியசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கூலித்தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 48). விறகு வெட்டும் கூலித் தொழிலாளி. இவரும், அதே ஊரைச் சேர்ந்த முனியசாமி (50) என்பவரும் விறகு வெட்டும் கூலித் தொழில் செய்து வந்தனர்.
விறகு வெட்டும் தொழிலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் முனியசாமி குடிபோதையில் வெங்கடாசலபதியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு வீட்டு வாசலில் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த வெங்கடாசலபதியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். உடனே அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவியும், மகளும் வெளியே ஓடி வந்து முனியசாமியை தடுத்தனர். இதில் அவர்களுக்கும் கையில் வெட்டுக் காயம் விழுந்தது.
அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த வெங்கடாசலபதி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முனியசாமியை விரட்டி சென்று மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து சாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபகுமார் வழக்குப் பதிவு செய்து முனியசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கூலித்தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X