என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமியை கடத்திய காதலன் கைது
Byமாலை மலர்30 Jun 2020 10:35 AM GMT (Updated: 30 Jun 2020 10:35 AM GMT)
மன்னார்குடியில் சிறுமியை கடத்திய காதலனை கைது செய்த போலீசார், சிறுமியை மீட்டு அவரது பாட்டியிடம் ஒப்படைத்தனர்.
மன்னார்குடி:
மன்னார்குடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் தாய், தந்தை வெளிநாட்டில் உள்ளனர். இதனால் அந்த சிறுமி நீடாமங்கலத்தை அடுத்த நாவல்பூண்டியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்.
இந்தநிலையில் அந்த சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த டிரைவரான திருநிறைச்செல்வன் (வயது 26) என்பவர் பழகி வந்துள்ளார். பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த சிறுமியின் பாட்டி சிறுமியை திருமக்கோட்டை அருகே உள்ள அவர்களது உறவினர் வீட்டில் கொண்டு விட்டார்.
இந்தநிலையில் சிறுமியை திடீரென காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பாட்டி மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது பேத்தியை டிரைவர் திருநிறைச்செல்வன் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பகவதி சரணம் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மீட்டு அவரது பாட்டியிடம் ஒப்படைத்தார். பின்னர் திருநிறைச்செல்வனை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் தாய், தந்தை வெளிநாட்டில் உள்ளனர். இதனால் அந்த சிறுமி நீடாமங்கலத்தை அடுத்த நாவல்பூண்டியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்.
இந்தநிலையில் அந்த சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த டிரைவரான திருநிறைச்செல்வன் (வயது 26) என்பவர் பழகி வந்துள்ளார். பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த சிறுமியின் பாட்டி சிறுமியை திருமக்கோட்டை அருகே உள்ள அவர்களது உறவினர் வீட்டில் கொண்டு விட்டார்.
இந்தநிலையில் சிறுமியை திடீரென காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பாட்டி மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது பேத்தியை டிரைவர் திருநிறைச்செல்வன் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பகவதி சரணம் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மீட்டு அவரது பாட்டியிடம் ஒப்படைத்தார். பின்னர் திருநிறைச்செல்வனை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X