என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாம்பன் தூக்குப்பாலத்தை கடக்க காத்திருக்கும் படகுகள்
Byமாலை மலர்28 Jun 2020 7:09 AM GMT (Updated: 28 Jun 2020 7:09 AM GMT)
மும்பையில் இருந்து ஆந்திரமாநிலம் காக்கிநாடா செல்ல பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை கடக்க 4 இழுவைப்படகுகள் துறைமுக அதிகாரிகளிடம் அனுமதிகேட்டு நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ராமேசுவரம்:
மும்பையில் இருந்து ஆந்திரமாநிலம் காக்கிநாடா செல்ல பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை கடக்க வந்துள்ள 4 இழுவைப்படகுகள் துறைமுக அதிகாரிகளிடம் அனுமதிகேட்டு பாம்பன் சிங்கிலிதீவு அருகே உள்ள தென்கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் வடக்கு கடல் பகுதியில் இருந்து தென் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல ஏராளமான மீன் பிடி விசைப்படகுகளும் தூக்குப்பாலம் திறப்புக்காக காத்திருக்கின்றன. துறைமுக அதிகாரிகள் ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு தூக்குப்பாலம் திறப்பது குறித்து தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் ரெயில்வே தூக்குப்பாலத்தின் உறுதி தன்மையை கண்டறிய ஐ.ஐ.டி. வல்லுனர்கள் குழுவினர் சென்சார் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி முடிந்த பின்னரே தூக்குப்பாலம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல்கள் மற்றும் மீன் பிடி படகுகள் விரைந்து கடந்து செல்ல வசதியாக மாதம் 2 முறையாவது தூக்குப்பாலத்தை திறந்துமூட ரெயில்வே துறைஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மும்பையில் இருந்து ஆந்திரமாநிலம் காக்கிநாடா செல்ல பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தை கடக்க வந்துள்ள 4 இழுவைப்படகுகள் துறைமுக அதிகாரிகளிடம் அனுமதிகேட்டு பாம்பன் சிங்கிலிதீவு அருகே உள்ள தென்கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் வடக்கு கடல் பகுதியில் இருந்து தென் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல ஏராளமான மீன் பிடி விசைப்படகுகளும் தூக்குப்பாலம் திறப்புக்காக காத்திருக்கின்றன. துறைமுக அதிகாரிகள் ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு தூக்குப்பாலம் திறப்பது குறித்து தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் ரெயில்வே தூக்குப்பாலத்தின் உறுதி தன்மையை கண்டறிய ஐ.ஐ.டி. வல்லுனர்கள் குழுவினர் சென்சார் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி முடிந்த பின்னரே தூக்குப்பாலம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல்கள் மற்றும் மீன் பிடி படகுகள் விரைந்து கடந்து செல்ல வசதியாக மாதம் 2 முறையாவது தூக்குப்பாலத்தை திறந்துமூட ரெயில்வே துறைஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X