search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார வாரியம்
    X
    மின்சார வாரியம்

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம்

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
     
    ஊரடங்கு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் இணைப்பிற்கான மின் கட்டணத்தை ஜூலை 15-ம் தேதி வரை செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

    அபராதமின்றி கட்டணத்தைச் செலுத்தலாம். இணைய தளம் வாயிலாகவும் மின் கட்டணத்தை செலுத்தலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
    Next Story
    ×