search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு உத்தரவு
    X
    ஊரடங்கு உத்தரவு

    நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறிய 9,105 பேர் கைது

    நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறிய 9,105 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை கண்டறிந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 7,467 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9,105 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 3,954 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×