என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் தட்டச்சு மைய உரிமையாளர் வீட்டில் 23 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்6 Jun 2020 9:32 AM GMT (Updated: 6 Jun 2020 9:32 AM GMT)
திருச்சியில் தட்டச்சு மைய உரிமையாளர் வீட்டில் 23 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி சித்ரா (வயது 43). இவர் அந்த பகுதியில் தட்டச்சு மையம் நடத்தி வருகிறார். தினமும் வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை முன்பக்கத்தில் உள்ள சுவற்றில் மறைத்து வைத்து விட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் சித்ரா வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு அதன் சாவியை மறைத்து வைத்து விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்ததும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 23 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து சித்ரா ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
முதல் கட்ட விசாரணையில் சித்ரா தினமும் வீட்டு சாவியை எங்கு வைக்கிறார் என்பதை மர்மநபர்கள் நோட்டமிட்டு, அவர் வேலைக்கு சென்றபின் சாவியை எடுத்துவீட்டிற்குள் சென்று நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி சித்ரா (வயது 43). இவர் அந்த பகுதியில் தட்டச்சு மையம் நடத்தி வருகிறார். தினமும் வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை முன்பக்கத்தில் உள்ள சுவற்றில் மறைத்து வைத்து விட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் சித்ரா வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு அதன் சாவியை மறைத்து வைத்து விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்ததும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 23 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து சித்ரா ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
முதல் கட்ட விசாரணையில் சித்ரா தினமும் வீட்டு சாவியை எங்கு வைக்கிறார் என்பதை மர்மநபர்கள் நோட்டமிட்டு, அவர் வேலைக்கு சென்றபின் சாவியை எடுத்துவீட்டிற்குள் சென்று நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X