search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குற்றாலம் அருகே வீட்டில் திருட முயன்ற வாலிபர் கைது

    குற்றாலம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புதுந்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    தென்காசி:

    குற்றாலம் அருகே முத்துமாலைபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி (வயது 45). இவர் தனது வீட்டில் குடும்பத்துடன் நேற்று முன்தினம் உறங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது மாடசாமி வீட்டின் கதவை பூட்டாமல் இருந்துள்ளார். இதை பயன்படுத்தி நள்ளிரவில் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் காளிமுத்து (31) என்பவர் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்றுள்ளார். அப்போது திடீரென கண் விழித்த மாடசாமி சத்தம் போடவே காளிமுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவை கைது செய்தார்.
    Next Story
    ×