search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சிறுமியை கட்டாயம் திருமணம் செய்த வாலிபர் கைது

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே சிறுமியை கட்டாயம் திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கும், சாலமரத்துபட்டியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் மணிகண்டனுக்கும் (36) என்பவருக்கும் இன்று அதிகாலை போச்சம்பள்ளி அருகே சென்றாய பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    இந்த திருமணம் சிறுமியின் பெற்றோர்கள் வற்புறுத்தலால் அவருக்கும் மணிகண்டனுடன் கட்டாயம் திருமணம் நடைபெற்றது.

    இதில் உடன்பாடு இல்லாத அந்த சிறுமி திருமணம் முடிந்தவுடன் நடந்த சம்பவத்தை சாமல்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவித்தார்.

    இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். கட்டாயம் திருமணம் குறித்து சிறுமியின் பெற்றோர் மற்றும் மணிகண்டனின் பெற்றோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×