என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்தவர் மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை
Byமாலை மலர்1 Jun 2020 9:30 AM GMT (Updated: 1 Jun 2020 9:30 AM GMT)
ராணிபேட்டை மாவட்டம் கலவையில் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்தவர் மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவை:
ராணிபேட்டை மாவட்டம் கலவையில் கலவைபுத்தூர் ரோட்டை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 42). இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர், சென்னை புறநகர் பகுதியான மதுரவாயலில் மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 வயது குழந்தையோடு வசித்து வந்தார். அவருக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
ஜீவானந்தம் 2 ஆண்டாக தனியாக வாழ்ந்து வந்தார். அதில் ஒருசில மாதமாக திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்தார். பின்னர் அவரின் தந்தை தான் செய்யும் தொழிலுக்கு உதவியாக அவரை வீட்டிலேயே இருக்கும்படி கூறி அழைத்து வந்தார். இதற்கிடையே, நேற்று அதிகாலை 5 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ஜீவானந்தம் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கலவை போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து மின்சார டிரான்ஸ்பார்மரில் பிணமாக தொங்கிய ஜீவானந்தத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிபேட்டை மாவட்டம் கலவையில் கலவைபுத்தூர் ரோட்டை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 42). இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர், சென்னை புறநகர் பகுதியான மதுரவாயலில் மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 வயது குழந்தையோடு வசித்து வந்தார். அவருக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
ஜீவானந்தம் 2 ஆண்டாக தனியாக வாழ்ந்து வந்தார். அதில் ஒருசில மாதமாக திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்தார். பின்னர் அவரின் தந்தை தான் செய்யும் தொழிலுக்கு உதவியாக அவரை வீட்டிலேயே இருக்கும்படி கூறி அழைத்து வந்தார். இதற்கிடையே, நேற்று அதிகாலை 5 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ஜீவானந்தம் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கலவை போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து மின்சார டிரான்ஸ்பார்மரில் பிணமாக தொங்கிய ஜீவானந்தத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X