search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனாவுக்கு மாதவரம் ஆவின் பால்பண்ணை ஊழியர் பலி

    சென்னை மாதவரம் ஆவின் பால்பண்ணை ஊழியர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னை:

    சென்னை மாதவரம் ஆவின் பால்பண்ணை மூலம் ஒரு நாளைக்கு 2.38 லட்சம் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் பாக்கெட்டுகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மட்டுமின்றி திருச்சி, புதுக்கோட்டை, சேலத்திற்கும் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் மாதவரம் ஆவின் பால்பண்ணையின் மிஷின் ஆபரேட்டர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

    மே மாதம் 26-ந்தேதி தொற்று உறுதியாகி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
    Next Story
    ×