என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிணற்றில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பலி
Byமாலை மலர்26 May 2020 5:29 AM GMT (Updated: 26 May 2020 5:29 AM GMT)
திண்டுக்கல் அருகே கிணற்றில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ராஜக்காபட்டியை அடுத்த சந்தனகுடிலை சேர்ந்தவர் பாலுச்சாமி (வயது 38). அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் சக்திவேல் (38). இருவரும் பழனி ரோட்டில் செயல்பட்டு வரும் மர அறுவை மில்களில் கூலித்தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்துவிட்டு, வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றனர். பாலுச்சாமி கிணற்றில் இறங்கி குளித்தார். சக்திவேலுக்கு நீச்சல் தெரியாததால், கிணற்றின் படிக்கட்டில் நின்று குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் சக்திவேல் தவறி விழுந்தார். நீரில் மூழ்கிய அவரை காப்பாற்ற பாலுச்சாமி முயன்றதாக தெரிகிறது. அதில் அவருடன் சேர்ந்து பாலுச்சாமியும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் ராஜக்காபட்டியை அடுத்த சந்தனகுடிலை சேர்ந்தவர் பாலுச்சாமி (வயது 38). அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் சக்திவேல் (38). இருவரும் பழனி ரோட்டில் செயல்பட்டு வரும் மர அறுவை மில்களில் கூலித்தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்துவிட்டு, வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றனர். பாலுச்சாமி கிணற்றில் இறங்கி குளித்தார். சக்திவேலுக்கு நீச்சல் தெரியாததால், கிணற்றின் படிக்கட்டில் நின்று குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் சக்திவேல் தவறி விழுந்தார். நீரில் மூழ்கிய அவரை காப்பாற்ற பாலுச்சாமி முயன்றதாக தெரிகிறது. அதில் அவருடன் சேர்ந்து பாலுச்சாமியும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X